News April 7, 2025

நாகை: மீனவர்களின் நெகிழ்ச்சிகர செயல்

image

நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.

Similar News

News January 3, 2026

நாகை: தொழில் தொடங்க கடன் உதவி

image

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

நாகை: இலவச எம்பிராய்டரி பயிற்சி அறிவிப்பு

image

நாகை புதிய கடற்கரை சாலை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், ஆரி ஒர்க் ,பிளவுஸ் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த 50 வயதுகுட்பட்டவர்கள் 6374005365 / 9047710810 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!