News April 10, 2025

நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

image

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 19, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

நாகையில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

நாகை மாவட்ட போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட 43 வாகனங்கள் மற்றும் ஒரு படகு ஆகியவை வரும் டிச.23-ந்தேதி, காலை 10 மணிக்கு நாகை ஆயுத படை மைதானத்தில் எஸ்.பி முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன் நேரில் பங்கேற்று ஏலம் கேட்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

image

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!