News April 10, 2025
நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
நாகை: திமுகவில் இணைந்த 2.5 லட்சம் பேர்!

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளருமான என்.கௌதமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்சம் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 56 ஆயிரம் உறுப்பினர்கள் திமுகவில் இணைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.
News September 15, 2025
நாகை: 11 ஆண்டுகள் தலைமறைவு; ரவுடி அதிரடி கைது

தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேப்பான் ராஜேந்திரன் (42). இவர் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி மற்றும் ஒரு திருட்டு வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. வேளாங்கண்ணி அருகே கடந்த 2011-ம் ஆண்டு சத்தியானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை நாகை பஸ் நிலையத்தில் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
News September 14, 2025
நாகை: டிகிரி போதும் அரசு வேலை!

நாகை மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..