News April 10, 2025
நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
நாகையில் 56,729 மெ.டன் நெல் கொள்முதல்

நாகையில் 2025-2026ம் ஆண்டு காரீப் குறுவை பருவத்தில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 56,729 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரையில் 36,852 மெ.டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 9,671 விவசாயிகளுக்கு ரூ.125.09 கோடி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
நாகை: மத்திய அரசு வேலை.. ரூ.35,400 சம்பளம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 15, 2025
நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!