News April 10, 2025

நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

image

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

நாகை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து நாளை நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 15, 2025

அரசுப் பணியாளர் தேர்வாணைய கணினி தேர்வு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News November 15, 2025

நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

நாகை மாவட்டத்தில் நவம்பர் 17 புலியூர், 18ந்தேதி புலியூர், நாகூர் தர்கா, 19ந்தேதி நாகூர் தர்கா, பெருங்கடம்பனூர், 20ந் தேதி கீழ தன்னிலப்பாடி, 21 ந்தேதி திருக்கண்ணங்குடி , 22ந் தேதி சீயாத்தமங்கை, செருநள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!