News August 8, 2024
நாகை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.
Similar News
News July 9, 2025
கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வலைகளை வெட்டி அபகரித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்த சம்பவம், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
News July 9, 2025
கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.
News July 9, 2025
நாகை மாவட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவுகளில், தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசாணையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வரண் முறைப்படுத்த 2026 ஜூன் 30 ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.