News August 8, 2024
நாகை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.
Similar News
News September 15, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருமருகல் வட்டத்தில் உழவர் சேவை மையங்கள் அமைக்க 25 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இந்த சேவை மையம் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விற்பனை செய்யலாம். சேவை மையம் அமைக்க அரசு சார்பில் பயிற்சி மற்றும் முதலீட்டில் 30% மானியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் திருமருகல் வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
News September 15, 2025
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News September 15, 2025
நாகையில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு

நாகை மாவட்டம், செல்லூரில் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் விளை நிலங்களை கையகப்படுத்தி டைடல் பார்க் (தொழில்நுட்ப பூங்கா) அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் செப்.30-ம் தேதி, காலை 10 மணியளவில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தேவநதி ஓடம்போக்கி விவசாயிகள் சங்க தலைவர் வ.சரபோஜி அறிவித்துள்ளார்.