News April 5, 2025
நாகை: மனக்கவலைகளை தீர்க்கும் மனத்துணைநாதர்

நாகப்பட்டினம், வலிவலம் பகுதியில் அருள்மிகு மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும். வாழ்வில் கவலையின்றி வாழ்வதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
News April 16, 2025
பொதுமக்களிடமிருந்து 19 மனுக்களைப் பெற்ற எஸ்.பி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.கே. அருண்கபிலன் எஸ்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
நாகை அஞ்சலகங்களில் காப்பீடு தொடங்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகாம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டை பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்த அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து காப்பீடுகளுக்கும் குறைந்த கட்டணமே பிரிமியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.