News November 24, 2024
நாகை: போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் அரசு உயர்நிலை பள்ளி சமூகவியல் ஆசிரியர் வீரமணி (50). இவர் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 23, 2025
நாகை: விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியில், காவேரி தமிழ் தேச விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கருப்புக்கொடி கையில் ஏந்தி, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், தோட்டக்கலைதுறையை வேளாண்மை துறையுடன் ஒன்றிணைக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
News December 23, 2025
நாகை: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

நாகை மக்களே.. அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
News December 23, 2025
நாகை: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

நாகை மக்களே.. அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.


