News November 24, 2024
நாகை: போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் அரசு உயர்நிலை பள்ளி சமூகவியல் ஆசிரியர் வீரமணி (50). இவர் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 17, 2025
நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(செப்.17) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து குறைகள் கேட்டு அறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 23 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
News September 17, 2025
நாகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
பெரியார் சிலைக்கு எம்எல்ஏ நாகை மாலி மரியாதை

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று(செப்.17) கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், CPIM கட்சியின் நாகை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் முகேஷ் கண்ணன், CITU மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.