News June 25, 2024
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News January 8, 2026
திருவாரூர்: சலூன் கடைக்காரர் போக்சோவில் கைது

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.
News January 7, 2026
திருவாரூர்: தீரா நோய்களை தீர்க்கும் கோயில்

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எமதர்ம ராஜாவுக்கென அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரைப் பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள எமனை தரிசிக்கின்றனர். SHARE NOW
News January 7, 2026
திருவாரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


