News June 25, 2024
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News December 10, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக IT WING மாநில செயலாளர் சதீஷ்குமார் முகநூலில் திருப்பரங்குன்றம் சம்பந்தமாக பதிவிட்ட பதிவிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரின் அலுவலகத்தில் புகுந்து தாக்க முற்பட்டதாகவு; இது தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களின் மீது வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளதாகவும் கூறி, இன்று பேரளம் கடைதெருவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
News December 10, 2025
திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.
News December 10, 2025
திருவாரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.


