News June 25, 2024
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News November 19, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.18) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 19, 2025
திருவாரூரில் போலி உரம் விற்பனை கண்டுபிடிப்பு

திருவாரூர் அடுத்த கோமள பேடடையில் தனியார் விற்பனை கூடத்தல் மற்றும் கடையில் உரங்கள் விற்பனை செய்யும் பொழுது, வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலியான உரங்கள் 8.850.மெட்ரிக் டன் உரங்கள் கண்டிப்பிடிக்கப்பட்டதை அடுத்து கடைக்கு சீல்வைத்தனார். உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
News November 18, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.


