News June 25, 2024

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

image

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News October 20, 2025

மன்னார்குடி கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

image

வைணவ திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி கோயிலில் இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காலை ருக்மினி சத்யபாமா உடனுறை ஸ்ரீ ராஜகோபால சுவாமி பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் புறப்பாடு கண்டருளினார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

News October 20, 2025

திருவாரூர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> bankofbaroda.bank.in<<>> எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 20, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 210.4 மி.மீ மழை பதிவு

image

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, திருவாரூர் மாவட்டத்தில் 210.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!