News September 14, 2024

நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வங்கதேச கடற்கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

நாகை: அரசு ஊழியர் தற்கொலை

image

திருக்குவளை அருகே முத்தரசபுரத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளர் கலைமணி (40) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 10, 2025

நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in <<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கீழ்வேளுர் வட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 10-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!