News April 26, 2025

நாகை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே.1ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக், மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுப்பானக்கூடங்கள், அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மே.1 அன்று யாரும் மது விற்பனை செய்யக்கூடாது, அதையும் மீறி மது விற்பனை செய்யப்பட்டால் மது விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 19, 2025

நாகையில் சாலை மறியல் போராட்டம்

image

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 19, 2025

நாகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

நாகை மாவட்டத்தில் 18 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

நாகை: சிக்கல் சிங்காரவேலவருக்கு கந்த சஷ்டி திருவிழா

image

நாகை மாவட்ட பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி கோயிலில், சிங்காரவேலருக்கு கந்த சஷ்டி திருவிழாவை வருகிற அக்.21ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான அக்.21ம் தேதி கணபதி ஹோமம் – வாஸ்து சாந்தியும் நடைப்பெற உள்ளது என செயல் அலுவலர் ப.மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!