News January 22, 2025
நாகை: கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
நாகையில் ஹவுஸ் வயரிங் இலவச பயிற்சி

நாகை புதிய கடற்கரை சாலை பகுதியில் உள்ள மத்திய அரசின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஹவுஸ் வயரிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்!

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்.
▶வேதாரண்யம்-04369-250457,
▶திருக்குவளை-04365-245450,
▶கீழ்வேளூர்-04366-275493,
▶நாகப்பட்டினம்-04365-242456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.!
News July 6, 2025
நாகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்!