News August 2, 2024

நாகை: காணாமல் போன சிறுமிகள் சென்னையில் மீட்பு

image

நாகை அன்னை சத்யா காப்பகத்தில் இருந்த 8 சிறுமிகளை காணாததால், புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 8 சிறுமிகளும் இன்று சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளிடம் விசாரித்த போது, காப்பக வார்டன் தங்களை தொடர்ந்து திட்டியதால் காப்பகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். இன்று மாலை சிறுமிகள் அனைவரும் நாகைக்கு மீண்டும் அழைத்து வரப்பட உள்ளனர்.

Similar News

News November 20, 2025

நாகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!

News November 20, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!