News February 17, 2025

நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம் 

image

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை -இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பிப்ரவரி 22ஆம் தேதி துவக்கம் சிவகங்கை தனியார் கப்பல் நிறுவனம் அறிவிப்புமேலும் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

Similar News

News December 8, 2025

நாகை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

ரூ.1.5 லட்சம் பரிசு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

நாகை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

நாகை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக்<<>> செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

error: Content is protected !!