News October 17, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று(அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நாகூர் தர்கா கலிபா

நகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, நாகூர் தர்கா கலீஃபாவும் முதல் அறங்காவலுருமான Dr. கலிபா மஸ்தான் சாஹிப் காதரி நேரில் சந்தித்து நேற்று
(டிச.10) பிரசாதம் வழங்கினார்.
News December 11, 2025
நாகை: கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

ஆக்கூா் அருகே அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் (20), முகமது அலி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News December 11, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


