News April 24, 2025
நாகை: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 26, 2025
மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.
News October 26, 2025
நாகை: லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாரதிராஜா(40). இவர் நேற்று பைக்கில் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யம் சென்றுள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News October 26, 2025
நாகை: ரூ.1,42,400 சம்பளத்தில் அரசு வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


