News April 24, 2025
நாகை: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 1, 2025
நாகை: 7வது நாளாக தொடரும் தடை!

டிட்வா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 7வது நாளாக 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததால் மீன் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது.
News December 1, 2025
நாகை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று!

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. கடந்த நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து இன்று கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நாகை மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


