News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News January 7, 2026
நாகை: கடத்தல் காரர்கள் அதிரடி கைது

நாகை எஸ்.பி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் நேற்று இரவு மாணிக்கப்பங்கு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் ரூ.50,000 மதிப்புள்ள 700 புதுவை மாநில சாராய பாட்டில்களை கடத்தி வந்த பாண்டியன், கிருபாநிதி ஆகிய இருவரையும் போலீசார் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் 3 டூவிலர்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.
News January 7, 2026
நாகை: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் ஜன.10-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுடைய, 8-வது முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.06) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.07) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


