News March 24, 2025

நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்

Similar News

News February 22, 2026

நாகை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

நாகை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 22, 2026

நாகை: சாலை விபத்தில் இளம்பெண் பலி

image

நாகை மாவட்டம் சின்னதும்பூரை சேர்ந்தவர் திவ்யா(27). இவர் ஒரத்தூர் மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காடந்தேத்தி அய்யனார் கோவிலுக்கு சென்றுவிட்டு, தனது ஸ்கூட்டியில் கீழையூர் அருகே வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டி மீது கார் மோதியதில் திவ்யாவிற்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 22, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!