News August 7, 2024
நாகையில் 3-வது புத்தக திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3-வது புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் 16.08.2024 முதல் 26.08.2024 வரை நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது , அனுமதி இலவசம், மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் குபேர பூஜை

நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு குபேர பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News October 21, 2025
நாகை: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News October 21, 2025
நாகை: நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு!

நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகங்களில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 8ம் வகுப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள், கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மகாலட்சுமி நகர் நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு, அனுப்பிடலாம் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.