News April 29, 2025
நாகையில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளைக்குள் (ஏப்.30) இங்கே <
Similar News
News October 20, 2025
நாகை: வெளுத்து வாங்க போகும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
நாகை: கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் எதிர்வரும் (24.10.2025) அன்று நாட்டுக்கோழிகள் வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு 04365-299806, 9677099846 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 20, 2025
நாகை: அமெரிக்காவுக்கு மீண்டும் அஞ்சல் சேவை

இந்திய அஞ்சல்துறை அமெரிக்காவிற்கு, இந்தியாவில் இருந்து அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவை கடந்த 15ந்தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு, நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.