News March 26, 2025

நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

நாகை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

image

நாகை மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

நாகை மாவட்டத்தில் 13.8 செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழையின்றி மந்தமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள்: நாகப்பட்டினம் 3.6 செ.மீ, திருப்பூண்டி 1.9 செ.மீ, வேளாங்கண்ணி 2.4 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, வேதாரண்யம் 1.2 செ.மீ, கோடியக்கரை 1.0 செ.மீ என நாகை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News November 21, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், சிறப்பு உதவி முகாம் வரும் நவ.22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!