News March 26, 2025

நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

நாகை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓவிய சவால்!

image

நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் ஓவிய சவால் நடைபெற உள்ளது. இதில் 5 நாள்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5வது நாள் சிறப்பு ! உங்கள் ஓவியங்களை வகுப்பறையில் காட்சிபடுத்துமாறும், உங்கள் படைப்புகளை #NagaiInktober என்ற ஹேஷ்டேக்குடன் @NagapattinamCollector பக்கத்தை சமுகவலைதளத்தில் Tag செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவித்துள்ளனர்.

News October 28, 2025

நாகை: லாரி மோதி டிரைவர் பரிதாப பலி

image

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (40). கார் டிரைவர். இவர் நேற்று பைக்கில் நாகையில் இருந்து வேதாரண்யம் சென்று கொண்டிருந்தபோது, ரெட்டாலடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பாரதிராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாண்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!