News March 26, 2025
நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
நாகை: இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி, 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், காரைக்கால், நாகை வழியாக வேளாங்கண்ணியை மாலை 5-30 வந்தடையும். இதேபோல முன்பதிவில்லாத மெமோ ரயில் விழுப்புரத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மயிலாடுதுறை, காரைக்கால் வழியாக மதியம் 1.05-க்கு நாகை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News November 26, 2025
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
நாகையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வரும் நவ.28-ம் தேதி (வெள்ளி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04365-252701 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


