News April 20, 2025
நாகையில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
நாகை: பேனர்கள் வைக்க கூடாது!

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மின்னலின் போது டிவி, மிக்ஸி, கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின் அருகில் கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. அதுபோல மின்கம்பங்களில் விளம்பர பேனர்களை கட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று(அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக் அழைப்பு

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.