News August 10, 2024

நாகையில் தடுப்பூசி முகாம்

image

நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஆக.17 அன்று செல்ல பிராணிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படாத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லப்பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 9, 2026

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

நாகை: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

News January 9, 2026

நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!