News December 4, 2024
நாகையில் சீன பூண்டுகள் 100 கிலோ பறிமுதல்

நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 18, 2025
நாகை: லீவு குறித்து கலெக்டர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எந்தவித விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டத்தின் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனால் விடுமுறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.


