News December 4, 2024

நாகையில் சீன பூண்டுகள் 100 கிலோ பறிமுதல்

image

நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 6, 2025

நாகை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

image

நாகை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <>ஆதார் செயலியை <<>>பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 6, 2025

நாகப்பட்டினம் துறைமுகத்தின் பெருமை!

image

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாக விளங்கி வருகிறது. குறிப்பாக நாகை மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இது இடைக்கால சோழர்கள், போர்ச்சுகீசியர்களின் முக்கிய துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 6, 2025

நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி

image

நாகை மாவட்டம் சின்னதும்பூர் ஊராட்சி அழகிரி தெருவை சேர்ந்த திருமாறன் கட்டிட பணியின் போது கீழே விழுந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த செய்தி அறிந்த, கீழையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நேரில் சென்று ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- நிதிஉதவி வழங்கினார்.

error: Content is protected !!