News December 4, 2024
நாகையில் சீன பூண்டுகள் 100 கிலோ பறிமுதல்

நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 7, 2025
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
News December 7, 2025
நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.


