News April 15, 2025

நாகையில் சத்துணவு பணியிடங்களுக்கு வேலை, ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, தமிழ் சரளமாக பேச வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. Share செய்யுங்கள்

Similar News

News November 19, 2025

நாகை: சாலையோரம் கிடந்த பிணம்

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 19, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

error: Content is protected !!