News August 9, 2024

நாகையில் இலங்கை மீனவர்கள் மீட்பு

image

இலங்கையை சேர்ந்த அகமது இர்பான் மற்றும் அஸ்டின் 20 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர்.படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர்.உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். அப்போது இந்திய – இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 24, 2025

நாகை: தேர்வு கிடையாது.. ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29, OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 24, 2025

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 469வது கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.30 இரவு புறப்பட்டு டிச.1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் னிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு டிச.1 தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 24, 2025

நாகைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன

error: Content is protected !!