News January 1, 2025
நாகையில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து ரத்து

காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் பயணிகள் செல்லும் வசதி, கட்டண சலுகை ஆகியவற்றுடன் நாளை 2 ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடல் தட்ப வெப்ப சூழ்நிலையால் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
நாகை: இலவச IRON BOX பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சலவை தொழிலாளிகள் திரவ பெட்ரோலியத்தால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளை (IRON BOX) பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்கம்பி உதவியாளர் பணிக்கான தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால், வரும் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04365-250129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், டிச.13 இரவு 10 மணி முதல் டிச.14 காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .


