News August 18, 2024

நாகர்கோவில் வழியாக சிறப்பு ரெயில்

image

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 21, 28 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரத்தில் புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கத்தில் ஆக., 22, 29, செப்.5 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும்.

Similar News

News November 28, 2025

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் இடமாற்றம்

image

குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) பணியாற்றி வந்த சுசிலா பீட்டர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பழனிவேல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் 47 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.

News November 28, 2025

குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

error: Content is protected !!