News August 14, 2024
நாகர்கோவிலில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஆக.,16 அன்று காலை 10 மணிக்கு தனியார்துறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தகவலை ஆட்சியர் அழகு மீனா இன்று(ஆக.,14) தெரிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News December 4, 2025
குமரி: 2,000 லிட்டர் மண்ணெண்ணய் கடத்தல்

நேற்று முன்தினம் (டிச.2) இரவில் கொல்லங்கோடு போலீசார் நீரோடி சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 55 கேன்களில் 2,000 லிட்டர் மானிய விலையில் மீனவர்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு மண்ணெண்ணய் கடத்த முயன்ற கலிங்கராஜபுரம் டிரைவர் லாலுவை (31) கைது செய்தனர்.
News December 4, 2025
குமரி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

கருங்கல் டிரைவர் சாஜிக்கும் (35), ஆப்பிக்கோடு சுஜினுக்கும் முன்விரோதம் இருந்தது. டிச.2.ம் தேதி சாஜி ஆப்பிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சுஜின், அவரது நண்பர்கள் அசோக், ரதீஷ், சுஜித், ரெஜி ஆகிய 5 பேரும் சேர்ந்து சாஜியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, கையிலிருந்த 5 பவுன் பிரேஸ்லெட்டை பறித்துச் சென்றனர். சாஜி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. கருங்கல் போலீசார் விசாரணை.


