News May 7, 2025
நாகப்பட்டினம்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News December 6, 2025
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
நாகை ஊர்காவல் படையில் வேலை – எஸ்.பி

நாகை மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள், ஆதார், கல்வி சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் டிச.15-ம் தேதி நாகை ஆயுத படை மைதானத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட எஸ்.பி செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!


