News May 7, 2025
நாகப்பட்டினம்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News December 12, 2025
நாகை: வகுப்பறையை திறந்து வைத்த அமைச்சர்

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிதாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி உடன் இருந்தார்.
News December 12, 2025
நாகை: திட்ட இயக்குனர் ஆய்வு

நாகை மாவட்டம் நீர்முளை சுற்றுவட்டார பலுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.சுருதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், ஊரக பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டிட பணிகள், அரசு நர்சரி, மரக்கன்றுகள் நடும் பணி போன்றவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
News December 12, 2025
நாகை: புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு!

கர்நாடகவை சேர்ந்தவர் டேனியல்( 49) நேற்று முன்தினம் குடும்பதோடு வேளாங்கண்ணிக்கு வந்தனர். மேலும் தனது மகள் ராகுல் காதலித்த பெண்ணையும் அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த பெண் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் தங்கி இருந்த ராகுல் உட்பட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை கூட்டி சென்றனர். இதையடுத்து 4 பேரும் சிகிசிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


