News May 7, 2025
நாகப்பட்டினம்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News October 20, 2025
நாகை: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோயில், சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். SHARE பண்ணுங்க.!
News October 20, 2025
நாகை: வெளுத்து வாங்க போகும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
நாகை: கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் எதிர்வரும் (24.10.2025) அன்று நாட்டுக்கோழிகள் வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு 04365-299806, 9677099846 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.