News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

image

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

News December 7, 2025

நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

image

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!