News January 2, 2025
நாகப்பட்டினம்: நாளை கடைசி நாள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4ஆம் தேதி நடைபெறும் சைக்கிள் ஒட்டும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்ப படிவங்களை dsonagai@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ நாளை (ஜன.3) தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
நாகை: வேண்டியதை அருளும் முருகன் கோயில்!

நாகை மாவட்டம் எட்டுக்குடி கிராமத்தில், எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News September 15, 2025
குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அன்பு கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமைத் துறை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார். உடன் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.
News September 15, 2025
ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் இஸ்திரி பெட்டி வழங்கிய கலெக்டர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.15) மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் பித்தளையால் ஆன இஸ்திரி பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவியையும் அவர் வழங்கினார்.