News March 28, 2025
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 11, 2026
சென்னையில் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னையில் மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
News January 11, 2026
சென்னை: இளம்பெண் மயங்கி விழுந்து பலி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபிகா ஹரிஸ் (37). வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் காலை, காய வைத்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்ற போது, மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
BIG NEWS: சென்னையில் இன்று கனமழை வெளுக்கும்!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பகுதியில் மழை பெய்ததா என கமெண்டில் சொல்லுங்க.


