News March 28, 2025
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
சென்னை: உடல் நசுங்கி கொடூர பலி!

சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் அப்துல் வாஹித் (38). நேற்று(நவ.22) இவர் ஆட்டோவில் பள்ளி மாணவி ஒருவரை சவாரியாக ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் – மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே பனைமரம் தானாக ஆட்டோவின் முன்பகுதி மேல் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.
News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.


