News March 28, 2025

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

image

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

சாதித்து காட்டிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செப்.26-ல் பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கி அவருக்கு கை சிதைந்தது. இந்த நிலையில், இழந்த ஒரு கையை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டுக்கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறை நடைபெறுகிறது.

News October 17, 2025

சென்னை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மழை காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளிப்புற மின் கேபிள்களை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர உதவிக்கு 100 மற்றும் Kaaval Uthavi செயலியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி இதை உடனே தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!