News May 17, 2024

நள்ளிரவில் நேர்ந்த துயர சம்பவம்!

image

மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியம் (30) என்பவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு பெய்த மழையினால் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலசுப்ரமணியன் மீது கட்டிட சுவர் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி மதிச்சியம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

BIG BREAKING: சற்று நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது சற்று நேரத்தில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட உள்ளது.

News December 4, 2025

BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

image

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

News December 4, 2025

JUST IN மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்..

image

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை 5:30 மணிக்குள் ஆஜராக கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். நீதிபதி எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பதிலளித்து வருகிறார்.

error: Content is protected !!