News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
தருமபுரி: மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஆடிட்டர்!

தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சையது அகமது என்ற ஆடிட்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூத்தொட்டியில் 2கஞ்சா செடிகளை வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, சையது அகமதைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 24, 2025
தருமபுரியை உலுக்கிய கோர பலி!

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
News December 24, 2025
தருமபுரியை உலுக்கிய கோர பலி!

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


