News February 16, 2025

நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

image

நல்லபள்ளி  அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Similar News

News January 1, 2026

தருமபுரி: எமனாய் மாறிய நாய்- முதியவர் பரிதாப பலி!

image

கம்பைநல்லூர் அருகே எலவடையைச் சேர்ந்த விவசாயி மோகன் (52), மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மாபேட்டை பிரிவு ரோடு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

தருமபுரி: தீப்பிடித்து எரிந்த வீடு!

image

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தேவரெட்டியூரைச் சேர்ந்த தொழிலாளி சின்னராஜின் ஓட்டு வீடு, மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

image

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.

error: Content is protected !!