News February 16, 2025

நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

image

நல்லபள்ளி  அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நிற்கும்!

image

சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (12695, 12696) மொரப்பூரில் நின்று செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தம்பிதுரை எம்பி மத்திய ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை செய்ததன் பேரில், இனி மொரப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News November 11, 2025

தருமபுரி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!