News February 16, 2025

நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

image

நல்லபள்ளி  அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Similar News

News January 7, 2026

தருமபுரி: தந்தை சாவில் மர்மம் ; மகன் புகார்

image

தருமபுரி: பொம்மிடி அருகே உள்ள சுரக்காபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (90). இவர் வயது முதிர்வின் காரணமாக சுரக்காபட்டியில் தனது மகள் ராணி வீட்டில் வசித்து வந்தார். அங்கு முதியவர் உயிரிழந்தார். இதனிடையே தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வடிவேலின் மகன் மாதவன் பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

தொப்பூரில் உள்ள நல்லூர் மாரியம்மன் கோயில் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த வாலிபர் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 7, 2026

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-6) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் ,தோப்பூரில் ஜீலான்பாஷா, மதிகோன்பாளையத்தில் நாகராஜ் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!