News April 11, 2025
நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.
Similar News
News September 15, 2025
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வெள்ளபாண்டியன் என்பவரின் மனைவி செல்லத்தாய் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
News September 15, 2025
தூத்துக்குடியில் குழந்தை திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே குழந்தை திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
News September 15, 2025
தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

தூத்துக்குடி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <