News October 24, 2024
நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

மலேசியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் படுத்த படுக்கையானார். மனம் தளராத அவரது மனைவி 6 ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். அண்மையில் உடல்நலம் தேறிய கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துள்ளார். அந்த பெண்ணோ, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என கணவனை வாழ்த்தினாலும், ‘நன்றி கெட்டவன்’ என அந்நபரை நெட்டிசன்கள் திட்டுகின்றனர்.
Similar News
News November 15, 2025
ஜப்பானில் இந்து கடவுள்கள் PHOTOS

6-9 ஆம் நூற்றாண்டுகளில் சீனா மற்றும் கொரியா வழியாக பல இந்து கடவுள்கள் ஜப்பானுக்குக் சென்றுள்ளன. அவர்களின் உருவப்படங்கள் பெரும்பாலும் இந்து மற்றும் பௌத்த கூறுகளைக் கலந்து, ஜப்பானிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில முக்கிய இந்து கடவுள்கள், ஜப்பானில் என்ன பெயரில், எப்படி இருக்கின்றனர் என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
தூய்மை பணியாளர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி

தூய்மை பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்கவே, அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக அன்புமணி சாடியுள்ளார். 107 நாள்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு, திமுக அரசு இதுவரை முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களது பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமாறும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News November 15, 2025
நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான தவெக

EC கூட்டங்களில் தவெகவிற்கு அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில EC முகவரிக்கு தவெகவினர் அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அலுவலகம் தலைமை செயலகத்தில் உள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி தவெகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


