News August 8, 2024

நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணி நிரப்பப்பட உள்ளது. chengalpattu.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆக.22ஆம் தேதிக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

FLASH: ’திமுகவால் தமிழகம் சீரழிந்துள்ளது!’ – அன்புமணி

image

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ”பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு சீரழிந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ” போக்சோ குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலமைச்சரின் செவிகளை எட்டவில்லையா?” என பாஜக தலைவர் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 11, 2026

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 2 பேர் கைது!

image

மதுராந்தகம் அருகே மார்ச்.9ம் தேதி இரவு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளில் ஒரு குற்றவாளி நேற்று (மார்ச். 10) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தாமோதர பெருமாள் (25) என்பவர் இன்று (மார்ச். 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 11, 2026

செங்கை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!