News May 17, 2024
நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 14, 2025
தூத்துக்குடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமான பட்டினமருதூரில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணியில் தொன்மையான பல்வேறு மண்பாண்ட சிதைவுகள், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டிடங்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இயற்கை பிசின்கள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
தூத்துக்குடியில் அரசு வேலைக்கு நீங்கள் ரெடியா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் மித்ரா சேவை ஊழியர்கள் பல்வேறு கிராமங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 35 வயது நிறைவடையாத மீன்வளம் மற்றும் கடல் உயிரினம், விலங்கியல் பாடத்தில் பட்டப் படிப்பு படித்த வாலிபர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


