News May 17, 2024
நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 9, 2026
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <
News January 9, 2026
தூத்துக்குடி: வாகனம் மோதி சமையல் மாஸ்டர் பலி.!

தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை சாலையில் உள்ள மடத்தூர் மேம்பாலத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கீழச்செக்காரக்குடியை சேர்ந்த சமையல் மாஸ்டர் சேரந்தையன் (52) என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 9, 2026
தூத்துக்குடி: வீடு புகுந்து.. காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்!

தட்டார்மடம் அருகே உள்ள போலையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஜெபாஸ்லின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, அவரை சகோதரர்கள் தாக்கியதால், அவர் ராஜேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் வீட்டிற்கு வந்த ஜெபாஸ்லினின் சகோதரர்கள் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


