News May 17, 2024
நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 7, 2026
தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு உயர்தர இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். எனவே, இதில் பயனடையும் தொழில் பங்கிட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
தூத்துகுடியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, டிகிரி தகுதி…

தூத்துக்குடி மக்களே, கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன.9ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 10 நிறுவனங்கள் 750க்கும் மேலான காலியிடங்களை அறிவித்துள்ளன. மேலும் விவரங்களுக்கு 9677734590 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News January 7, 2026
தூத்துக்குடிக்கு பொங்கல் பரிசாக ரூ.162 கோடி!

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5,41,007 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 162 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE


