News October 24, 2024
நத்தம் அருகே தீ விபத்து

திண்டுக்கல், நத்தம், வேலம்பட்டியில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை கடை உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நிலக்கோட்டையில் பீர் பாட்டிலால் குத்தி கொலை: அதிரடி கைது!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் லாரன்ஸ்(49) இவரது உறவினரான செபஸ்டின் ஜெயராஜ்(29) என்பவரும் கோவில்மேடு சிவன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் செபஸ்டின் ஜெயராஜ் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்தார். தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் செபாஸ்டின் ஜெயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 4, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

திண்டுக்கல் இந்திரா நகரில் வசிக்கும் மாரிமுத்து, சொப்னா தேவி வீட்டில் பூட்டு சாவியை எடுத்து பணம், நகை கொள்ளை அடித்ததாக திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்.பி. பிரதீப் அவர்களின் உத்தரவின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சி தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கரூர் சதீஸ் குமார் என்பரை கைது செய்தனர்.
News December 4, 2025
நத்தம் அருகே சோகம்..கூலித்தொழிலாளி பலி!

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டூவீலரில் வத்திபட்டிக்கு சென்றுவிட்டு மதுரைதுவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில், விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் வந்தபோது, அவரது டூவீலரும் எதிரே வந்த காரும் மோதியது. இதில்,படுகாயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


