News August 16, 2024
“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
5 மையங்களில் 2ம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர் பணிக்கு ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் காரியாபட்டி செவல்பட்டி ஆகிய 5 மையங்களில் 7403 ஆண்களும், 2339 பெண்களும் என மொத்தம் 9742 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
News November 8, 2025
சிவகாசி மக்களே; தவறவிடாதீங்க!

சிவகாசி ஐயப்பன் கோயில் வளாகத்தில் வைத்து வரும் 10, 11 ஆகிய 2 நாட்கள் இலவச புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண், பெண் இருபாலருக்குமான புற்றுநோய் கண்டறியும் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 9443125930, 9443378412, 9843024209 ஆகிய அலைப்பேசி எண்களுக்கு அழைத்து முன்பதிவு செய்யலாம்.
News November 8, 2025
சிவகாசி: 134 பேர் பலி.. நடவடிக்கை தேவை

சிவகாசி பகுதியில் இன்னும் சில தினங்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்க உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேலான பட்டாசு விபத்துகளில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிலை முடக்காமல், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்தி தவறுகளை சரி செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.


