News August 16, 2024

“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

image

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

ஸ்ரீவி: தமிழகத்தையே பதற வைத்த வழக்கில் தீர்ப்பு

image

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News November 21, 2025

விருதுநகர்: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி..!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு க்ளிக் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 21, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!