News April 25, 2025
நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
மயிலாடுதுறை: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் களமாடு விளையாட்டு மற்றும் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 20, 2025
மயிலாடுதுறை: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்!

மயிலாடுதுறை மாவட்ட பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <
News December 20, 2025
மயிலாடுதுறை: லஞ்சம் வாங்கிய VAO கைது

தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கேணிக்கரை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் பெய்த மழையில் உயிரிழந்தது. இந்நிலையில், இறந்த மாட்டிற்கு அரசு அளித்த நிவாரணத் தொகையை பெற்று கொடுத்ததற்கு விஏஓ ஜெயபிரகாஷ் லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


