News April 25, 2025

நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல் 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News November 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு நிலவரம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை இன்றி காணப்படும் நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 33 மிமீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 16.80, மணல்மேட்டில் 12.60, சீர்காழி 20.40, கொள்ளிடத்தில் 28, தரங்கம்பாடியில் 9.70 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 25, 2025

மயிலாடுதுறை அருகே 1008 சங்காபிஷேகம்

image

திருவெண்காடு கிராமத்தில் புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 25, 2025

மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!