News January 1, 2025
நடப்பாண்டில் விபத்தில் சிக்கி 280 பேர் பலி

கோவை மாநகரில் நடப்பாண்டில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகம், அலட்சியமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களுக்காக விபத்து ஏற்பட்டுள்ளது. மாதத்தில் 25 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். மாதம் 75 பேர் காயமடைகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் வரை 286 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 883 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
கோவையில் OPS -க்கு ஆயுர்வேத சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். அப்போது, பேசிய ஓபிஎஸ் பேச வேண்டியதை எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என்றார். பின், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார்.
News November 26, 2025
கோவை வரும் துணை முதல்வர்

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (26-11-2025) பிற்பகல் 02:30 மணிக்கு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கோவை விமான நிலையம் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, அவருக்கு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே இதில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
கவுண்டம்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் (19). இவர் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த அவர், அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து மனவேதனை அடைந்தார். பின் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


