News January 1, 2025
நடப்பாண்டில் விபத்தில் சிக்கி 280 பேர் பலி

கோவை மாநகரில் நடப்பாண்டில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகம், அலட்சியமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களுக்காக விபத்து ஏற்பட்டுள்ளது. மாதத்தில் 25 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். மாதம் 75 பேர் காயமடைகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் வரை 286 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 883 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
கோவை: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடன் சுமை காரணமாக இவர் இன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் கோவை ஜிஎச் கொண்டு சென்றனர். அங்கு நாடித்துடிப்பு குறைவாக இருந்த நிலையில் காரமடை சேரன் நகரில் உள்ள தாய் மாமா வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <
News November 9, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர் மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் நவ.15-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.


