News September 13, 2024
நடப்பாண்டில் இரண்டு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019-இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, பழனி திண்டுக்கல் கல்லூரி மாணவர் முகமது அன்சாரி, சேலம் கல்லூரி மாணவி நிவேதா இருவருக்கும் ஒரு லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது.
Similar News
News December 13, 2025
சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 13, 2025
சென்னை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
News December 13, 2025
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)


