News April 27, 2025
நசியனுரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணைதேவை என, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த திண்டுக்கல சேர்ந்த மனோஜ்குமார் 29 விண்ணப்பிக்க, இருவரும் பேசி பழகி உள்ளனர். பின் அந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடி சென்றான், அந்த பெண்மணி சித்தோடு போலீஸில் புகார் அளிக்க அந்த வாலிபரை கைது செய்த போலிஸார் கோபி கிளை சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 6, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 6, 2026
சட்டமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
News March 5, 2026
ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


