News January 1, 2025

நகராட்சியுடன் இணையும் பஞ்சாயத்துகளின் பட்டியல்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் இணையும் ஊராட்சிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சியில் பெரிய கோட்டை, கணக்கம்பாளையமும், தாராபுரம் நகராட்சியில் கவுண்டன்புதூர், நஞ்சியம்பாளையமும் பல்லடம் நகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூர், மாணிக்கபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கப்படுகிறது. மேலும் அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.

Similar News

News November 14, 2025

திருப்பூர்: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். திருப்பூர் மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 14, 2025

வெள்ளகோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் இன்று அதிகாலை ஸ்ரீராம் நகர் அருகே நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .விபத்து குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய தம்பதி: அதிரடி கைது!

image

மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போயின. இது தொடர்பாக கேமரா காட்சிகள் ஆய்வு செய்த போது திண்டுக்கல்லை சேர்ந்த பரமேஸ்வரன் (46), மனைவி விஜயலட்சுமி (35) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!