News August 10, 2024
தோவாளை கால்வாய் உடைப்பு – வழக்கு ஒத்திவைப்பு

தோவாளை தூவச்சி பகுதியில் கடந்த ஆண்டு கால்வாய் உடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதற்குரிய நிவாரணம் வேண்டும் என தோவாளை விவசாயி ஞான சேசு மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று நடைபெற்ற விசாரணையில், வழக்கு குறித்து வேளாண் துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Similar News
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

புதுக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. டிரைவரான இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் முன் விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரது கையில் அணிந்திருந்த ஐந்து பவுன் பிரைஸ் லெட், கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
குமரி: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
குமரி: 2,000 லிட்டர் மண்ணெண்ணய் கடத்தல்

நேற்று முன்தினம் (டிச.2) இரவில் கொல்லங்கோடு போலீசார் நீரோடி சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 55 கேன்களில் 2,000 லிட்டர் மானிய விலையில் மீனவர்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு மண்ணெண்ணய் கடத்த முயன்ற கலிங்கராஜபுரம் டிரைவர் லாலுவை (31) கைது செய்தனர்.


