News February 18, 2025
தோல்வியில் முடிந்த சீமான் சமாதான முயற்சி

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் விலகிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் இரா.மகேந்திரனை சீமான் தரப்பு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் அதை ஏற்காத அவர், “நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்” என தீர்கமாக தெரிவித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும், விரைவில் இன்னும் சில முக்கிய விக்கெட்டுகள் விழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
செங்கல்பட்டு: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News November 22, 2025
செங்கல்பட்டு: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
செங்கல்பட்டு: மாட்டுக்கு பாலியல் ரீதியாக தொல்லை!

பல்லாவரம் அருகே பசுமாட்டை மர்ம நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அனுப்பிய நிலையில், விலங்கு நல ஆர்வலர் நடத்திய ஆய்வில் அந்த நபர் மாட்டிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


