News August 26, 2024

தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

image

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News November 28, 2025

ராமநாதபுரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

News November 28, 2025

பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

image

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

image

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!