News August 26, 2024

தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

image

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News December 19, 2025

ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24 ( புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News December 19, 2025

ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும் அதற்குப் பதிலாக 10.01.2026 அன்று சனிக்கிழமையினை பணி நாளாக அறிவித்தும் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!