News November 10, 2024

தொழிலதிபர் மகன் போதையில் கீழே விழுந்து பலி

image

மதுரை பச்சரிசிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நிமிசந்த் ஜெயின். இவரது மகன் சஞ்சய் குமார் ஜெயினுக்கு(30) மதுப்பழக்கம் இருந்துள்ளது. இன்று(நவ.10) குடிபோதையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திடீர்நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 8, 2025

மதுரை: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News December 8, 2025

மதுரை அருகே எத்தனால் லாரி கவிழ்ந்து விபத்து

image

திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி ஒன்று சேமிப்பு கிடங்கு வாயில் அருகே கால்வாய்க்குள் கவிழ்ந்தது. நாமக்கல்லில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனாலை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தது. திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் மூன்று கிரேன்கள் மூலம் 8 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

News December 8, 2025

மேலூர் அருகே கைதான போலீஸ் தலை மறைவு

image

மதுரை நரசிங்கம்பட்டி பாண்டி குமார் 35 திருமயத்தில் போலீசாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் டூவீலரில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய போது, சின்னமந்தையன் செக்கடி பகுதியில் போலீசார் பாண்டி குமாரை கைது செய்து டூவீலர், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய போலீஸ்காரர் கூறவே, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு தப்பினார். மேலூர் போலீசார் தேடுகின்றனர்.

error: Content is protected !!