News February 16, 2025
தொண்டி அருகே ஊரணியில் மிதந்த இளைஞர் சடலம்

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சிபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் முருகானந்தம்(36) . இவர் இன்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள ஊரணியில் இறந்த நிலையில் சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News April 21, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் 499 பேர் கோரிக்கை மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து 499பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல்சிங், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News April 21, 2025
இராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் அலுவலக எண்கள்

இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள் தொலைபேசி எண்கள்
கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
தாசில்தார் இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க
News April 21, 2025
வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், தேர்தல் தாசில்தார்கள் காளீஸ்வரன் ரவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.