News August 14, 2024
தொடர் விடுமுறையால் உயர்ந்த ஆம்னி பேருந்துகட்டணம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடர் விடுமுறையின் எதிரொலியாக ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.2400 முதல் ரூ.3000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணமும் கனிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 21, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.20) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்க்கான கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18.11.2025 முதல் தொடங்கிய இந்த உதவி மையங்கள் 25.11.2025 காலை 10 மணி முதல் 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையங்களில் சம்மந்தப்பட்ட பகுதியின் வாக்காளர்கள் பயன்படுத்தலாம்
News November 20, 2025
மீனவ இளைஞர்களுக்கு குடிமைப்பணி தேர்வு ஆயத்த பயிற்சி

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமை பணி போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். சேர www.fisheries.tn.gov.in விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து சின்ன நீலாங்கரையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 25 – ம் தேதிக்குள் அனுப்பவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


