News May 17, 2024

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையில் இருந்து பள்ளபட்டி செல்லும் வழியில் உள்ள விவசாய இடங்களில் கிணற்றில் போதிய நீர் இல்லாமல் முருங்கை செடிகள் அனைத்தும் வாடிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் காய்ந்த செடிகள் அனைத்தும் மீண்டும் துளிர் விட துவங்கியதால் இன்று விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 6, 2025

திண்டுக்கல் நாளை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சி நாளை (07.11.2025) நடைபெறும் இடங்கள். குஜிலியம்பாறை கே.கே. திருமண மண்டபம், கூம்பூர்,தொப்பம்பட்டி வட்டாரத்தில் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபம், வயலூர்,ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் சமுதாயக் கூடம், அழகுபட்டி,வடமதுரை வட்டாரத்தில் மந்தை திடல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில், பி.கொசவபட்டி ஆகிய இடங்களில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News November 6, 2025

திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ,சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதை போல் நவ, 6 இன்று “இணையத்தில் உள்ள கடன் செயலி loan app மூலம் கடன் பெறுவது தவிர்ப்போம்”என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை ,திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 6, 2025

திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <>www.tnpds.gov.in <<>>இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

error: Content is protected !!